×

நடிகை சோனாலி கொலை: 3 பேருக்கு 5 நாள் காவல்

பனாஜி: அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகை சோனாலி, நண்பர்களுடன் கோவா சென்றபோது கடந்த 22ம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக சோனாலியின் சகோதரர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சோனாலியின் தனி உதவியாளர் சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங், கர்லிஸ் ஓட்டல் உரிமையாளர் எட்வின் நன்ஸ் கைது செய்யப்பட்டனர். சோனாலிக்கு போதைப்பொருள் விநியோகித்த ராம்தாஸ் மண்ட்ரேகர், தத்தாபிரசாத் கோயங்கரை போலீசார் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், எட்வின், ராம்தாஸ், தத்தாபிரசாத் நேற்று கோவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி எட்வின் ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து மூவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார். இதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post நடிகை சோனாலி கொலை: 3 பேருக்கு 5 நாள் காவல் appeared first on Dinakaran.

Tags : Sonali ,Panaji ,Ariana ,Goa ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்